Sexual Abuse / Rape Representational Image (Photo Credit: Pixabay)

ஜூலை 29, போபால் (Madhya Pradesh News): மத்தியப் பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுவன் தனது தாய், தந்தை, 2 மூத்த சகோதரிகள் மற்றும் ஒரு இளைய சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். அச்சிறுவன் கடந்த 24-ஆம் தேதி இரவு வழக்கம் போல தனது இளைய சகோதரியுடன் உறங்கச் சென்றுள்ளார். அப்போது, தனது செல்போனில் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார். பின், அருகே உறங்கிக் கொண்டிருந்த தனது தங்கையை பாலியல் வன்கொடுமை (Sexual Harassment) செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமி தனது தந்தையிடம் இதுகுறித்து சொல்ல போவதாக தெரிவித்துள்ளார்.

இதனால், பயத்தில் சிறுமியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். பின், தனது தாயிடம் சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். அவரது தாய் வந்து சிறுமியைப் பார்க்கும்போது அவர் மூச்சுத் தினற அழுதுகொண்டு இருந்த நிலையில், தனது தாயின் கண் முன்னே மீண்டும் அச்சிறுமியின் கழுத்தை நெறித்து படுகொலை (Murder) செய்தார். இந்த சத்தம் கேட்டு வந்த மூத்த சகோதரிகள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், தாய் தன் பிற மகள்கள் உதவியோடு, இறந்து கிடந்த இளைய மகளை வீட்டின் முற்றத்தில் தூக்கி வீசியுள்ளார். Teenager Stabbed Young Girl: காதல் விவகாரத்தில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து; காதலன் வெறிச்செயல்..!

சிறுமியின் உடலைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, சிறுமி விஷப் பூச்சி கடித்து இறந்ததாகக் கூறியுள்ளனர். ஆனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.

இதனையடுத்து மேற்கொண்ட தீவிர விசாரணையில், குடும்பத்தினர் நடந்தவற்றை கூறியுள்ளனர். பின்னர் அவர்களைக் கைது செய்த காவல்துறையினர் தாயையும் அவரது மூத்த மகளையும் சிறைக்கு அனுப்பிவிட்டு, 18 வயதுக்குக் கீழ் உள்ள இரண்டாவது மகளையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சிறுவனையும் சிறார் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.