Lawyer Suicide Case in UP (Photo Credit: @TrueStoryUP X)

அக்டோபர் 28, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பரேலியில் வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மனைவி மற்றும் அவரது காதலன் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர் கமல் குமார் - கோமல் தம்பதி, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, மனைவி கோமலுக்கு அமர் குமார் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். Railway Recruitment: டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.35,400 சம்பளத்தில் இந்திய இரயில்வேயில் வேலை.. 5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

வழக்கறிஞர் தற்கொலை:

இந்நிலையில், மனைவி கோமல் தனது காதலன் அமர் குமாருடன் ஓடிவிட்டார். இதனால் மனமுடைந்த வழக்கறிஞர் திடீரென தற்கொலை (Suicide) செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பான விசாரணையில் மனைவி மற்றும் அவரது காதலர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.