Death File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 04, கவுகாத்தி (Guwahati News): அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பகுதியை சேர்ந்தவர் அமித் மேதி. இவர் அப்பகுதியை சேர்ந்த பெண்மணியை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், பெண்மணிக்கு திடீரென காதலனின் மீது விரக்தி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. Chennai Shocker: சிறுமியை 11 பேர் கும்பல் பலாத்காரம் செய்த விவகாரம்; வாட்சப் குழுவில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.. பகீர் சம்பவம்.!

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அமித் மேதி, தனது காதலியுடன் தனிமையில் நெருக்கமாக இருந்த காட்சிகளை வெளியிட்டு இருக்கிறார். இதனால் மனமுடைந்துபோன பெண்மணி விபரீத முடிவெடுத்துள்ளார்.

வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் பெண்ணின் சடலத்துடன் கடிதத்தையும் கைப்பற்றி இருக்கின்றனர்.

பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவே, விசாரணை நடந்து வருகிறது. காதலரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.