RAPE FILE PIC (PHOTO CREDIT: PIXABAY)

செப்டம்பர் 14, புது டெல்லி (New Delhi): டெல்லியில் உள்ள தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (Jawaharlal Nehru University JNU). இந்த பல்கலை,யில் பயின்று வரும் மாணவி ஒருவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏகே என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 03ம் தேதி இளம்பெண் தனது வாஜிராபாத் குடியிருப்பில் இருந்துள்ளார்.

அங்கு சென்ற இளைஞன், தனது தோழியிடம் பல ஆசை வார்த்தை கூறி பேசி இருக்கிறார். மேலும், தான் இவ்வுளவு நாட்கள் உன்னையே காதலித்து வந்ததாகவும், உன்னை திருமணம் செய்வேன் என்றும் கூறியுள்ளார். Anna Birthday Medal: காலில் வெட்டுக்காயத்துடன் பலாத்கார குற்றவாளிகளை பிடித்த காவல் உதவி ஆய்வாளர் உட்பட 127 பேருக்கு அண்ணா பதக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.! 

இருவரும் தங்களின் உரையாடலை முடித்து பெண்ணும் காதலை வெளிப்படுத்திய நிலையில், அன்றே ஆசை வார்த்தைக்கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.. பின் தற்போது வரை திருமணம் குறித்து பேசுவதில்லை.

இளம்பெண் பலமுறை காதலனிடம் திருமணம் தொடர்பாக பேசியும் பலன் இல்லை. அவர் இளம்பெண்ணை தவிக்கவிட்டு செல்லவே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று இந்திய அரசியலமைப்பு சட்டம் 376 வது பிரிவின் கீழ் வழக்குப்பதிந்த வாஜிராபத் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.