நவம்பர் 13, சிக்கமகளூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் மாவட்டம், என்.ஆர் புரா தாலுகா, வெல்லால் கிராமத்தில் வசித்து வருபவர் பாபு. இவரது மகன் சரண் (வயது 13). சிறுவன் அப்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே, சிறுவன் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது, சிறுவனின் நண்பர்கள் சிறுவனை மது சொல்லியதாக தெரியவருகிறது. சிறுவனும் ஆர்வம் மற்றும் நண்பர்களின் தூண்டுதல் காரணமாக மதுபானம் அருந்தி இருக்கிறார். Delhi Blast: டெல்லி கார் வெடிப்பு.. பாகிஸ்தானுக்கு துணை போன மற்றொரு நாடு?.. திட்டம் தீட்டி நடந்த பயங்கரம்.. அதிர்ச்சி திருப்பம்.!
விஷம் குடித்தார்:
பின் இந்த விஷயம் அப்பாவுக்கு தெரிந்தால் திட்டுவார் என சரண் பயந்துள்ளார். மேலும், வீட்டுக்கு செல்லாமல் வெளியே சுற்றி வந்த நிலையில், பயத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விஷம் குடித்து இருக்கிறான். இரவு நேரத்தில் நீண்ட நேரம் ஆகியும் மகன் வீட்டுக்கு திரும்பாததால், பதறிப்போன பெற்றோர் அவனை அங்குள்ள பகுதிகளில் தேடி அலைந்துள்ளனர். அச்சமயம் தனியாக அமர்ந்திருந்த சரணை கண்ட பெற்றோர், ஏன் வீட்டிற்கு வரவில்லை? என கேட்டு இருக்கின்றனர்.
சிறுவன் மரணம்:
சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் குடித்ததாகவும், உங்களுக்கு தெரிந்தால் திட்டுவீர்கள் என்ற பயத்தில் வீட்டுக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், அதீத பயத்தினால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விஷம் குடித்து விட்டதாகவும் கூறி இருக்கிறான். இதனைக்கேட்டு பதறிப்போன பெற்றோர், உடனடியாக சிறுவனை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..