Died file pic (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 07, நவி மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் (Navi Mumbai) உள்ள மால்வான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 48 வயதான பெண் உயிரிழந்தார். இதனை பார்த்த அவரது கணவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் (செப்டம்பர் 05) விநாயகர் சதுர்த்தி (Ganesh Chathurthi) திருவிழாவுக்காக தம்பதி விபின் ஹட்கர் (வயது 51)-உஷா ஹட்கர் (வயது 48) தங்களது சொந்த கிராமமான மசுரேவுக்குச் சென்றிருந்தனர். இவர்களுடன் விபின் ஹட்கரின் 75 வயதான தாயும், அவரது உறவினர்களின் இரண்டு குழந்தைகளும் சென்றனர். அதேநேரத்தில் தம்பதியரின் மகன் மும்பையில் தங்கியிருந்தார். Momos: மோமோஸ் பிரியரா நீங்கள்?.. கொஞ்சம் மாவு பிசையும் லட்சணத்தை பாருங்களேன்.. பகீர் சம்பவம்.!

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில், மனைவி உஷா ஹட்கர், செப்டிக் டேங்க் (Septic Tank) மூடியை சுத்தம் செய்யச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் தனது மனைவி வராததை அறிந்த அவரது கணவர் விபின் ஹட்கர், வீட்டில் எல்லா இடங்களிலும் அவளைத் தேடினார். மேலும் அருகிலுள்ள சில உறவினர்களிடம் விசாரித்தார். அப்போது, செப்டிக் டேங்க் அருகே அவளது காலணிகள் கிடப்பதை கண்டார். பின்னர், அதன் அருகில் கழிவுநீர் தொட்டியின் உடைந்த உறையை பார்த்தார். செப்டிக் டேங்கிற்குள் தனது மனைவியின் உடலைப் பார்த்த அவர், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மால்வான் காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.