Young Man Attacked in UP (Photo Credit: @TrueStoryUP X)

ஜூன் 10, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், குஷிநகரில் (Kushinagar) உள்ள நெபுவா நௌரங்கியா காவல்நிலையப் பகுதியில், கடந்த 6 நாட்களுக்கு முன்பு திருமணமான காதலியைச் சந்திக்க வாலிபர் வந்துள்ளார். அங்கு தனது காதலியின் அறையில் அந்த வாலிபர் இருப்பதாக ரகசிய தகவலின் பேரில், சோதனை செய்தபோது, ​​அவர் ஒரு பெட்டியில் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. Fire Accident: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 3 பேர் உயிரிழந்த சோகம்..!

வாலிபர் மீது கொடூர தாக்குதல்:

அவரை பெண்ணின் குடும்பத்தினர் பிடித்து அடித்து உதைத்தனர். மேலும், அவரை கயிற்றால் கட்டி, மொட்டை அடித்து, முகத்தில் கரியை பூசினர். இதனைத்தொடர்ந்து, திருமணமான பெண்ணும் தனது காதலனுடன் செல்வதாக கூறினார். அந்த வாலிபரை கிராமத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கினர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ இதோ: