Women Cheated by Lover: காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்துவிட்டேன்., ஆட்சியர் காலில் விழுந்து கதறிய இளம்பெண்.. கண்ணீர் சோகம்.!

இரண்டு முறை காதலனால் கர்ப்பமான பெண்மணி கருக்கலைப்பு செய்த நிலையில், காதலன் மற்றும் அவனின் குடும்பத்தார் கைவிரிப்பதை உணர்ந்த பெண்மணி கண்ணீருடன் ஆட்சியரின் காலில் விழுந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.

Mayiladuthurai Collector Office (Photo Credit: Google Maps)

பிப்ரவரி 20, மயிலாடுதுறை (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செங்கொடி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையன். இவரின் மகள் சுகப்பிரியா. அதே பகுதியை சேர்ந்தவர் வினோத். சுகப்பிரியா - வினோத் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. இதனையடுத்து, காதல் ஜோடி இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், போனில் பேசியும் காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் ஆசை வார்த்தை கூறிய வினோத், சுகப்பிரியாவை தனிமையில் வரவழைத்து நெருங்கி இருக்கிறார்.

கருவை கலைக்க வற்புறுத்தல்: இதனால் அவர் கர்ப்பமான நிலையில், ஆசையாக இந்த தகவலை காதலனிடம் தெரிவித்து திருமணம் செய்யக்கூறி கோரிக்கை வைத்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத வினோத், கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். பின் மீண்டும் இதே செயல் தொடர்ந்து இருக்கிறது. இரண்டாவது முறை திருமணத்தில் விடாப்பிடியாக பெண்மணி இருந்த நிலையில், வினோத்தின் தாயார், சகோதரி ஆகியோர் சேர்ந்து கருவை கலைக்க வற்புறுத்தி இருக்கின்றனர். மேலும், கருக்கலைப்பு செய்யாத பட்சத்தில் திருமணம் நடக்காது என்றும் கூறியுள்ளனர்.

கருக்கலைப்பு மாத்திரை வழங்கி கொடுமை: ஒருகட்டத்தில் ஆசையாக பேசிய வினோத்தின் சகோதரி, சத்து மாத்திரை என சுகப்பிரியாவுக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து இருக்கிறார். இதனால் இரண்டு முறையும் கரு கலைந்துள்ளது. திருமணம் குறித்து சுகப்பிரியா வினோத் மற்றும் அவரின் தாயாரிடம் கூற, அவர்கள் அவதூறாக பேசி இருக்கின்றனர். இதனால் தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த பெண்மணி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை. காவல் ஆய்வாளர் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்காமல், பெண்ணுக்கு எதிரான செயல்களை முன்னெடுப்பதாகவும் கூறப்படுகிறது. Actress Died: 36 வயது ஆபாச பட நடிகை தற்கொலை; ஜானி சின்சுடன் 20 வயதில் தொடங்கிய பயணத்திற்கு முற்றுப்புள்ளி..! 

ஆட்சியரிடம் புகார்: இதனால் மனமுடைந்துபோன சுகப்பிரியா, தனது தாயாருடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆட்சியரின் காலில் விழுந்து கதறியழுது புகார் அளித்தார். புகாரை ஏற்ற மாவட்ட ஆட்சியர், உரிய விசாரணை நடத்த உத்தரவிடுவதாக நம்பிக்கை தெரிவித்து தாய் மற்றும் மகளை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் மல்லிகா - அழகர்சாமி தம்பதியின் மகன் வினோத் என்பவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், அவரால் இரண்டு முறை கர்ப்பமாகி கருக்கலைப்புக்கு உள்ளாகினேன். இரண்டாவது முறை வினோத்தின் சகோதரி வித்யா கருக்கலைப்பு மாத்திரையை சத்து மாத்திரை கொடுத்தார். இதன்பேரில் திருமணம் கோவில் வாசலில் வைத்து நடக்க, அவர் மேற்படி குடும்பம் நடத்தவில்லை. வினோத் மற்றும் அவரின் பெற்றோர் என்னை கொடுமைப்படுத்துகின்றனர்" என்று கண்ணீர் விட்டு கதறினார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement