Shop Vandalized (Photo Credit: Twitter)

ஜூலை 18, ஆக்ரா (Viral Video): உலகத்தில் ஏழு மிகப்பெரிய அதிசயங்களில் தாஜ்மஹாலும் ஒன்று. இந்தியாவில் ஆக்ரா நதிக்கரையில் உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள தாஜ்மஹாலை காணுவதற்கு சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகளும் நேரில் வந்து செல்வார்கள்.

அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹாலின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. உலக அதிசயத்தின் உச்சமாக கருதப்படும் தாஜ்மஹால் முகலாய பேரரசு இந்தியாவில் ஆட்சி செய்தபோது காதலின் நினைவு சின்னமாக அமைக்கப்பட்டது. Oommen Chandy: மூத்த காங்கிரஸ் தலைவர், முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்; துக்கத்தில் காங்கிரஸ் வட்டாரம்..!

இந்நிலையில், சம்பவத்தன்று தாஜ்மஹாலை சுற்றி பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்து கடையில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்தது. கடைக்காரரிடம் சென்று வாக்குவாதம் செய்த மர்ம கும்பல், அவரின் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது.

இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சம்பவம் தொடர்பாக ஆக்ரா நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் சர்ச்சைக்குரிய செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.