பிரபல நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்.!

தென்னிந்திய முன்னணி நடிகைகளான அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் நேற்று காலமானார்.

Sarasamma Nair Passes Away (Photo Credit : @mathrubhumieng X)

நவம்பர் 28, கேரளா (Cinema News): தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகைகளாக விளங்கிய அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் சரசம்மா நாயர். இவர் கேரள மாநிலத்தில் உள்ள கல்லாரை பகுதியில் வசித்து வந்த நிலையில், நேற்று காலமானார். இவர் தனது இளம் வயதில் பெண் உரிமைக்காக போராடுவது, அரசியல் பணிகளில் ஈடுபடுவது என தீவிரம் காட்டி வந்தார். இந்த நிலையில் தனது 86 வது வயதில் இயற்கை எய்தினார். இது தொடர்பாக நடிகை அம்பிகா தனது இணையதள பக்கத்தில், "நான் வாழ்ந்தது என் அம்மாவுடன்… ஆனால் இன்று அவர் அப்பாவுடன் சேர்ந்துவிட்டார். இனி நான் மட்டுமே மீதம்" என மனம் உருகி தெரிவித்துள்ளார். இவரின் மறைவுக்கு முன்னணி பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளைய வானிலை: டிட்வா புயல் தாக்கம்.. தமிழகத்தில் ரெட் அலர்ட்.. புயல் காற்றுடன் விளாசப்போகும் கனமழை.!

நடிகை அம்பிகா உருக்கம்:

View this post on Instagram

A post shared by Ambika (@starambika)

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement