மார்ச் 25, உஜ்ஜைன் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் மஹாகல் கோவில் உள்ளது. வடமாநிலங்களில் தற்போது ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவதால், கோவில்களில் மக்கள் வெள்ளம் திரண்டு இருக்கிறது. அந்த வகையில், மஹாகல் கோவிலிலும், கர்பக்ரிஹா என்ற நிகழ்வில் தெய்வங்களுக்கு ஆராதனை காண்பிக்கப்பட்டது. அச்சமயம் எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கோவில் குருக்கள் மற்றும் பக்தர்கள் என 13 பேர் காயமடைந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டோரை மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். Holi Festival 2024: அன்பு, சகோதரத்துவத்தை வர்ணங்களால் வலுப்படுத்தும் ஹோலி பண்டிகை; வரலாறு, சிறப்புக்கள் என்ன?.. விபரம் இதோ.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)