Trending Video: சாலையில் சிதறிக்கிடந்த ரூ.500 நோட்டுகள்.. முண்டியடித்து அள்ளிய மக்கள்.!!
சாலையில் பறந்த 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மே 18, கவுசாம்பி(Uttarpradesh News): உத்திரபிரதேசம் கவுசாம்பியில் உள்ள நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர்களின் பையில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் விழுந்தன. இதனை அவ்வழியே சென்ற பொதுமக்கள் பார்த்த நிலையில், பணத்தை போட்டி போட்டுக்கொண்டு அள்ளியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து, காவல்துறையினரின் விசாரணையில் அது தொழிலதிபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் பணம் சிதறிக்கிடந்த நிலையில் அதனை பலரும் சேகரித்த வீடியோ :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)