ஜூலை 12, ஒடிசா (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவட்டம் கஞ்சமஜிராவில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண ஜோடியை ஊர்மக்கள் ஏர் பூட்டி, பிரம்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊர் வழக்கப்படி, அத்தை மகன் மற்றும் மகளை தங்களது சகோதர - சகோதரிகளாக கருதும் நிலையில், ஊரார் எதிர்ப்பை மீறி சொந்த அத்தை மகனை இளம்பெண் காதல் திருமணம் செய்ததால் கிராம மக்கள் தண்டனை வழங்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை சந்தித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி.ஸ்வாதிகுமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். Air India Plane Crash: இறுதி நொடியில் விமானிகள் பேசிக்கொண்ட தகவல்.. விமான விபத்துக்கு காரணம் இதுதான்.! 

காதல் ஜோடிக்கு கிராமத்தினர் தண்டனை வழங்கிய வீடியோ :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)