Rave Party Raid: உரத்த இசை, மது மற்றும் ஆபாச நடனம்.. இரவு நேர பார்ட்டியில் போலீஸ் அதிரடி.., 50 பேர் கைது..!
ராஜஸ்தானில் இரவில் தாமதமாக அனுமதியின்றி ரேவ் பார்ட்டி நடத்திக் கொண்டிருந்த 50 இளைஞர்கள் மற்றும் பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஏப்ரல் 28, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், தலைநகர் ஜெய்ப்பூரில் (Jaipur) ஹிம்மத்புரா பகுதியில் அமைந்துள்ள 'கைலாம் அதர்வா அரண்மனை மற்றும் உணவகத்தை' பக்ரு காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, 50 வாலிபர்கள் மற்றும் பெண்களை கைது செய்தனர். இதுகுறித்த விசாரணையில், ஹோட்டலில் இரவு (Late Night Party) தாமதமாக அனுமதியின்றி இரவு நேர விருந்து நடந்து கொண்டிருந்தது. அதில் அதிக சப்தத்துடன் இசை, மது மற்றும் பிற நடவடிக்கைகள் நடைபெற்றன. தகவலின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்தனர். மேலும், ஹோட்டல் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க விசாரணை நடத்தி வருகிறது. ஜெய்ப்பூரில் இதுபோன்ற சட்டவிரோத இரவு நேர விருந்துகளை கண்காணித்து, எதிர்காலத்திலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Odisha Shocker: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. உறவினர் கைது..!
வீடியோ இதோ:
जयपुर में देर रात हिम्मतपुरा स्थित होटल 'कैएलम अथर्वा पैलेस एंड रेस्टोरेंट" में हो रही एक रेव पार्टी में बगरू थाना पुलिस ने रेड मारकर 50 युवक-युवतियों को गिरफ्तार किया है।#Jaipur pic.twitter.com/Cj7kSe0HRC
— ReporteR Sahab (@ReporterSahab) April 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 01:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

