செப்டம்பர் 17, லக்னோ (Uttar Pradesh News): உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள லுலு மாலில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமில் இருந்து 45 கிராம் தங்க வளையலை, இரண்டு பெண்கள் கடைக்கு வந்து நகைகளை பார்ப்பது போன்று திருடிச் சென்றுள்ளனர் (Gold Theft Caught). பின்னர், இதுதொடர்பாக கல்யாண் ஜூவல்லர்ஸில் இருந்து அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இரண்டு பெண்கள் நகைகளை திருடிச் செல்வது தெரியவந்துள்ளது. மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தங்க வளையலை திருடிச் சென்ற பெண்கள் இருவரும் யார் எனத் தீவிரமாக தேடி வருகின்றனர். லுலு மாலில் அரங்கேறிய திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Sexual Assault Case: மனைவியை பாலியல் அடிமையாக்கி சித்திரவதை.. இரண்டு சிறுமிகளை சீரழித்த பாவி..!

திருடும் சிசிடிவி காட்சி வெளியீடு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)