ஏப்ரல் 02, சென்னை (Viral Video): ஓடும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் (Rajdhani Express) ஏற முயன்றபோது ஒருவரின், வளர்ப்பு நாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த நபர் தனது வளர்ப்பு நாயுடன் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது, நாய் சமநிலையை இழந்து தண்டவாளத்திற்கும், நடைமேடைக்கும் இடையில் விழுந்தது. இதனால் நாய், சம்பவ இடத்திலேயே இறந்தது. இந்த சம்பவத்தின் காணொளி வைரலானதை அடுத்து, விலங்கு ஆர்வலர்கள் அந்த நபர் மீது அலட்சியத்திற்காக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். செல்லப்பிராணி உரிமையாளர், அலட்சியமாகச் செயல்பட்டு, புறப்படும் ரயிலைப் பிடிக்க முயன்றபோது நாயின் கயிற்றைப் பிடித்தார். இதன் காரணமாக, நாய் தண்டவாளத்தில் இடைவெளியில் விழுந்து உயிரிழந்தது. இச்சம்பவம் நடந்த சரியான நேரம் மற்றும் இடம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. Road Accident: பேருந்து மீது கார் மோதி கோர விபத்து; 5 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!
வீடியோ இதோ:
Viral video shows a pet dog falling onto the tracks as its owner tries to board a moving train.
Reports suggest the dog miraculously survived the accident.#Dog #Train #Viral #ViralVideo pic.twitter.com/dmtYdjhrAL
— TIMES NOW (@TimesNow) April 2, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)