மே 26, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதியம் 1 மணிவரையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்து மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Gold Silver Price: தங்கம் விலை இன்று குறைவு.. விவரம் உள்ளே.!
1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் :
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 26, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)