Coimbatore Flood: கோவை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை; சுரங்கப்பாதை நீருக்குள் சிக்கிய பேருந்து.!

எஸ்பிஎம் தனியார் பேருந்து தேங்கியிருந்த மழை நீரில் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Coimbatore Flood: கோவை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை; சுரங்கப்பாதை நீருக்குள் சிக்கிய பேருந்து.!
SPM Bus Coimbatore Struck into Water 13-Oct-2024 Heavy Rains (Photo Credit: @praddy06 X)

அக்டோபர் 13, கோவை (Coimbatore News): இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்குப் பருவமழை தீவிரம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை முதலாகவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் கனமழையானது தொடர்ந்து வெளுத்து வாங்கி வந்தது. இதனிடையே, கோவை சாயிபாபா காலனி பகுதியில் எஸ்பிஎம் தனியார் பேருந்து, இரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. வானிலை: இன்று 22, நாளை 19 மாவட்டங்களில் கனமழை; சென்னை மக்களே மிககவனம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

இரயில்வே சுரங்கப்பாதைக்குள் தேங்கியிருந்த நீரில் சிக்கிக்கொண்ட தனியார் பேருந்து:

கோவையில் வெளுத்து வாங்க காத்திருந்த மழை மேகங்கள்:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 13, 2024 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).