Tirupathur News: சத்துணவு முட்டைக்காக சாதியை சொல்லி திட்டு.. சத்துணவு அமைப்பாளரின் கொடூர எண்ணம்.!
Tirupattur Nutrition Center: சத்துணவில் முட்டை வாங்கச் சென்ற 7ம் வகுப்பு மாணவரை, சத்துணவு அமைப்பாளர் சாதியைச் சொல்லி திட்டியதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிடிக்குப்பதில் நடந்துள்ளது.
நவம்பர் 14, பொம்மிக்குப்பம் (Vellore News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொம்மிடிக்குப்பம் பகுதியில், அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக பத்மினி என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் சத்துணவில் முட்டை வாங்கச் சென்றபோது, அவரை சாதி ரீதியாக பேசி பத்மினி திட்டியதாக தெரியவருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது சகோதரரிடம் கூறியபோது, அவர் கேட்டபோதும் சாதி குறித்து அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. Pregnancy Tips: மகப்பேறு காலங்களில் மரணம் ஏன்? மருத்துவரின் விளக்கம்..!
7ம் வகுப்பு மாணவர் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பான காணொளி:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)