டிசம்பர் 14, விருதுநகர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதமானமாக பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதனை நம்பி அம்மாவட்ட மக்களின் பிழைப்பு என்பது இருக்கிறது. அவ்வப்போது பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்துகளும் நிகழும். இந்நிலையில், இன்று விருதுநகர் சாத்தூர், பனையபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், பட்டாசு ஆலை தொழிலாளி சண்முகராஜ் (வயது 38) என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் அங்குள்ள கண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். தீயணைப்பு படையினர் சண்முகராஜின் உடலை மீட்டதைத்தொடர்த்து, காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Tirupattur Shocker: வேனின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி: வீட்டு வாசலில், தாயின் கண்முன் நடந்த சோகம்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)