Dindigul Railway Station | Gang Rape File Pic (Photo Credit: @sanjay_naidu01 X / Pixabay)

செப்டம்பர் 23, திண்டுக்கல் (Dindigul News): திண்டுக்கல் சந்திப்பு இரயில் நிலைய வளாகத்தில், இன்று கல்லூரி மாணவி ஒருவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டார். மாணவியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்த நிலையில், தன்னை நால்வர் கும்பல் கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்கள் இங்கு வந்து தன்னை இறக்கிவிட்டு தப்பிச் சென்றதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். Salem Shocker: "உணவு சமைக்கவில்லையா?" என கேள்வி எழுப்பிய கணவன் கழுத்தறுத்து படுகொலை; சேலத்தில் பகீர் சம்பவம்.!

கடத்திவந்து அதிர்ச்சி செயல்:

இதனையடுத்து, உடனடியாக மாணவியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த காவல்துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவி நர்சிங் துறையில் பயின்று வருவது தெரியவந்தது. அவரை கேரளாவில் இருந்து நால்வர் கும்பல் தேனி மாவட்டத்திற்கு கடத்தி வந்துள்ளது. Trichy Shocker: பழிக்குப்பழியாக பயங்கரம்? திருச்சியில் பிரபல ரௌடி சுரேஷ் வெட்டிக்கொலை.. மனைவியின் கண்முன் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.!

நால்வர் கும்பலுக்கு வலைவீச்சு:

அங்கு மாணவியை நால்வர் கும்பல் கூட்டாக சேர்ந்து சீரழித்த நிலையில், திண்டுக்கல் இரயில் நிலையம் அழைத்து வந்துவிட்டுச் சென்றுள்ளனர் என்பது உறுதியானது. தற்போது மாணவி சிகிச்சையில் அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான நான்கு பேர் கும்பலுக்கு வலைவீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. மாணவியின் விபாரத்தை சேகரித்து, பெற்றோர்-உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.