Bomb Threat (Photo Credit: @backiya28 X)

மார்ச் 1, சென்னை (Chennai): தமிழக அரசின் தலைமைச் செயலகமானது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இச்செயலகத்தில் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் தொடங்குகின்றன. இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு, தலைமை செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு வந்தது. Madurai HC On Keeladi Excavation Petitions: கீழடி அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அதனைத் தொடர்ந்து ஊடகத்துறையினர் காவல் துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி காவல் துறையினர்கள் பலர் தலைமை செயலகத்தில் குவிக்கப்பட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர் மற்றும் மோப்ப நாய்களை கொண்டு தலைமை செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவமானது தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.