செப்டம்பர் 25, சென்னை (Chennai News): சென்னையில் வசித்து வந்த வெங்கடேசன் - ராணி தம்பதிக்கு மகளாக பிறந்த IAS அதிகாரியான பீலா தனது தந்தை எல்.என்.வெங்கடேசனின் பெயரை கடந்த 2023 ஆம் ஆண்டு மாற்றி இருந்தார். என்.எல்.வெங்கடேசன் தமிழக காவல்துறையில் பிஜிபியாக பொறுப்பு வகித்து பின் ஓய்வு பெற்றவர் ஆவார். இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாழையடி பகுதியாகும். வெங்கடேசனின் மனைவி ராணி சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர். அவர் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாக பணியாற்றி இருக்கிறார். பீலா வெங்கடேசன் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாஸ் என்பவரை கடந்த 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் காவல்துறையில் சிறப்பு டிஐஜியாக பணியாற்றி இருந்தார். ராஜேஷ் தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், விசாரணைக்கு பின் தம்பதிகளிடையே மனக்கசப்பு உண்டாகியதாக கூறப்படுகிறது.
பீலா வெங்கடேசன் மறைவு :
இதனை தொடர்ந்து பீலா ராஜேஷ் (Beela Rajesh Death) என்ற பெயரை மீண்டும் பீலா வெங்கடேசன் என மாற்றிக்கொண்டார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த பீலா வெங்கடேசன் (வயது 56) புற்றுநோய் காரணமாக (Beela Venkatesan Death) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று காலமானார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா சமயத்தின் போது தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளராக இவர் பணியாற்றி இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பீலா வெங்கடேசனின் மறைவுக்கு ஆளுநர், எதிர்கட்சித் தலைவர், மற்றும் பிற கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். மேலும் பீலா வெங்கடேசனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் :
ஆளுநர் ஆர்.என்.ரவி பீலா வெங்கடேசனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பதிவில், "டாக்டர் பீலா வெங்கடேசன், இ.ஆ.ப., அவர்களின் அகால மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அர்ப்பணிப்புள்ள அரசு அலுவலராக குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் முன்னெப்போதும் சந்தித்திராத சவால்களை தேசம் எதிர்கொண்டபோது மாநிலத்தின் சுகாதாரத்துறை செயலாளராக தனது இரக்கம் நிறைந்த தலைமைத்துவம் மூலமும் கூர்மையான நிர்வாகத் திறன்கள் மூலமும் அவர் ஆற்றிய சேவைகள் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது அர்ப்பணிப்பு நிறைந்த பணிகள் பொது சுகாதாரம் மற்றும் அரசு நிர்வாகத்தில் நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளன. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி!" என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி :
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பதிவில், "தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். பீலா வெங்கடேசன் இ.ஆ.ப. அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். என தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் :
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர்
டாக்டர். பீலா வெங்கடேசன் இ.ஆ.ப. அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்… pic.twitter.com/g6oJqlhHkO
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) September 24, 2025
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் :
முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திருமதி ராணி வெங்கடேசன் அவர்களது மகள், தமிழக அரசின் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய திருமதி பீலா வெங்கடேசன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். திருமதி பீலா வெங்கடேசன் அவர்கள் தமிழ்நாடு அரசின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியபோது, ஒவ்வொரு துறையிலும் தன் நேர்மை, கடமை உணர்வு மற்றும் பொதுமக்கள் நலனுக்கான அக்கறை ஆகியவற்றால் சிறப்பாகப் புகழ்பெற்றவர். குறிப்பாக கொரோனா நோய் பரவிய காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக இருந்தபோது, மக்களின் உயிரைக் காப்பதற்காக அவர் மேற்கொண்ட விடாமுயற்சியும், உறுதியான நடவடிக்கைகளும் என்றும் மறக்க முடியாதவை. அந்நேரத்தில் மருத்துவ வசதிகள், சிகிச்சை ஏற்பாடுகள், தடுப்பூசி பணிகள் என அனைத்திலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு தமிழக மக்களின் மனதில் நிலைத்திருக்கும். எந்த பொறுப்பை கொடுத்தாலும் தனி ஆளுமையோடு செயல்படக்கூடியவர். இவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திருமதி பீலா வெங்கடேசன் அவர்களின் மறைவினால் வாடும் அவரது தாயார் திருமதி ராணி வெங்கடேசன் அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் :
தமிழ்நாடு எரிசக்தித்துறை செயலாளராக பணியாற்றி வந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மருத்துவர் பீலாவெங்கடேசன் `உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மருத்துவர் பீலாவெங்கடேசன் அவரது பதவிக்காலத்தில் வகித்த அனைத்துப் பொறுப்புகளையும் திறம்பட நிர்வகித்தவர். புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியில் எனது வகுப்புத் தோழர். நல்ல நண்பர். கல்லூரிக் காலங்களில் இருந்தே எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர். தமிழக அரசு நிர்வாகத்தில் உயர்பதவிகளுக்கு வந்திருக்க வேண்டியவர் இளம் வயதில் காலமானது வருத்தமளிக்கிறது. இ.ஆ.ப. அதிகாரி பீலா வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.