Bus Accident Panruti, Cuddalore Visual from Spot (Photo Credit: Facebook)

ஜூன் 19, பண்ரூட்டி (Cuddalore): கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

தனியார் பேரூந்துகளான சுகம் மற்றும் துர்கா பேருந்துகள் (Panruti Private Bus Accident) நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், இரண்டு வாகனங்களும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டது.

நொடியில் நடந்த விபத்தில் இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி களநிலவரப்படி 10 பேர் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவை உறுதி செய்யப்படவில்லை.

Accident (File Pic)

இரண்டு பேருந்துகளும் அதிவேகத்தில் பயணித்த நிலையில், ஒரு பேருந்தின் டயர் திடீரென வெடித்ததில் எதிரெதிர் திசையில் வந்தபோது பயங்கர விபத்து நடந்துள்ளது.

முதற்கட்ட தகவலில் மேற்கூறிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், களநிலவரங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 6 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.