
ஏப்ரல் 28, சென்னை (Chennai News): தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), இன்று (ஏப்ரல் 28) பேரவை விதி எண் 110-யின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 9 புதிய அறிவிப்புகளை (TN Govt Announcement Today in Tamil) வெளியிட்டார். Breaking: செந்தில் பாலாஜி, பொன்முடி பதவி விடுவிப்பு.. யாருக்கு எந்த துறை? முழு விபரம் உள்ளே.!
அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்புகள்:
- அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, 01-10-2025 முதல் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பண பலன் பெறும் நடைமுறை இந்த ஆண்டே செயல்படுத்தப்படும். இதனை செயல்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 3,561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
- அரசு ஊழியர்களுக்கு 01-01-2025 முதல் அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1,252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து, ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
- அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சமாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ரூ.50,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
- அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, திருமண முன்பணமாக ரூ.5 லட்சம் உயர்த்தி வழங்கப்படும்.
- பொங்கல் பண்டிகைக்கு, அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும்.
- ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை கால முன்பணம், 4,000 ரூபாயிலிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், ஓய்வூதியங்கள் குறித்து அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
- திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு, மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு (Probation Period) கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.