Girl Sad | Crime File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 03, லாகூர் (World News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் மாகாணம், சர்கோதா தெற்கு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, அப்பகுதியில் தொழிலதிபராக வலம்வரும் தம்பதியின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்துள்ளார்.

உணவு கொடுக்காமல் சித்தரவதை: தொழிலதிபர் தம்பதியான ஜாவத் பாட்டி (Jawad Bhatti) மற்றும் அவரின் கணவர் சேர்ந்து, 12 வயது சிறுமியை ஈவு இரக்கமின்றி கடுமையாக தாக்கி, உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளனர்.

சிறுமி பலி: சம்பவத்தன்று சிறுமியை தம்பதி இரும்பு கம்பியால் தாக்கி சித்ரவதை செய்ய, ஒருகட்டத்தில் துடிதுடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி திடீர் மரணம் அடைந்துவிட்டதாக அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Lemon Ginger Drink: உடல் எடையை குறைக்க நினைக்கிறீங்களா?.. கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும் இஞ்சி-எலுமிச்சை நீர்.! 

தம்பதிக்கு வலைவீச்சு: நிகழ்விடத்திற்கு விரைந்தவர்கள் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவான தம்பதியை தேடி வருகின்றனர்.

விசாரணைக்கு உத்தரவு: தொழிலதிபராக வளரும் வரும் நபர், சுங்கச்சாவடி ஒப்பந்ததாரரும் ஆவார். இந்த விசயத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள மகனா முதல்வர், காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு இருக்கிறார். இதனால் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.