Ukraine-Russia War: உக்ரைனுக்கு அமெரிக்கா தந்த ஏவுகணை.. தீவிரமடையும் ரஷ்யா- உக்ரைன் போர்.!
உக்ரைனில் இருந்தபடியே ரஷ்யாவில் உள்ள விமான தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் ஏவுகணையை உக்ரைனுக்கு, அமெரிக்கா வழங்கி உள்ளது.
நவம்பர் 27, மாஸ்கோ (World News): கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் போரின் (Ukraine-Russia War) தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது.
ரஷ்யா- உக்ரைன் போர்: சமீபத்தில், மாஸ்கோ மற்றும் ரஷ்யாவின் டொரோபெட்ஸில் உள்ள இராணுவ தளத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதலை நடத்தியது. மேலும் கருங்கடலில் உள்ள பாம்பு தீவு அருகே ரஷ்ய ராணுவத்துடன் உக்ரேனியப் படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
யுனிசெஃப் தகவல்: யுனிசெஃப் (UNICEF) வெளியிட்டிருக்கும் தகவலின்படி, ரஷ்ய - உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையில், இதுவரை 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 16 குழந்தைகள் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1000 நாட்களில், குறைந்தது 1,496 கல்வி நிறுவனங்கள், 662 சுகாதார வசதிகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. Plane Catches Fire: எஞ்சினில் பற்றி எரிந்து தீக்கிரையான விமானம்.. 95 பயணிகளின் நிலைமை? துருக்கியில் பதறவைக்கும் சம்பவம்.!
ஒப்புதல் அளித்த புதின்: இந்த போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய கொள்கையில் புதின் (President Vladimir Putin) கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, அணு ஆயுதம் இல்லாத நாடு, அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டுடன் கூட்டணி வைத்து ரஷ்யா மீது போர் தாக்குதல் மேற்கொண்டால், பதிலுக்கு அந்நாட்டின் மீது ரஷ்யாவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது அமெரிக்காவால் ரஷ்யாவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது நீண்டதூரம் சென்று இலக்கை குறிவைத்து தாக்கும் ஜேஏஎஸ்எஸ்எம் வகை ஏவுகணையை (Joint Air to Surface Standoff Missile - JASSM) அந்த நாடு உக்ரைனுக்கு வழங்கி உள்ளது. 1088 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணையில் 453 கிலோ அளவுக்கு வெடிப்பொருட்களை நிரப்ப முடியும். இதனால் குறைந்தபட்சம் 370.4 கிலோமீட்டர், அதிகபட்சமாக 900 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தாக்குதல் நடத்த முடியும். மேலும் இந்த ஏவுகணையால் உக்ரைனில் இருந்தே ரஷ்யாவின் 30 விமான தளங்களை குறிவைத்து அழிக்க முடியும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)