CA Exams Postponed: போர் பதற்றம் அதிகரிப்பு.. சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு..!
நாட்டில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மே 09, டெல்லி (Delhi News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சிஏ தேர்வுகள் (CA Exam) ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நிலவும் பதட்டமான பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சிஏ இறுதி, இடைநிலை மற்றும் PQC தேர்வுகளின் மீதமுள்ள மதிப்பீட்டுத் தேர்வுகள், மே 09, 2025 முதல் மே 14, 2025 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Air Siren in Chandigarh: சண்டிகரில் சைரன் ஒலி.. மக்கள் கவனத்துடன் இருக்க இந்திய ராணுவம் எச்சரிக்கை.!
சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)