RBI Announce Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 25 புள்ளிகள் அதிகரித்தது ஆர்.பி.ஐ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.5 % ஆக உயர்த்தியதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பிப்ரவரி 08: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் (RBI Governor Shaktikanta Das), புதன்கிழமையான இன்று ரிசர்வ் வங்கியின் ரெப்போ (Repo Rate) வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் உயர்த்தி அறிவித்தார். இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் (Reserve Bank Of India) ஆளுநர் வெளியிட்டுள்ள நிதிக்கொள்கை அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதம் 6.5% உயர்த்தப்பட்டு இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடத்த மே மாதம் முதலாகவே இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி குறுகிய (Short Term Lending Rate) காலத்திற்கான கடன் விகிதத்தினை 225 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. Nagaland Elections 2023: தேர்தலுக்காக மக்களுக்கு பரிசுப்பொருட்கள் பட்டுவாடா.. ஒரேநாளில் ரூ.30,71,47,188 மதிப்புள்ள பொருட்கள் அதிரடி பறிமுதல்..!