Weather Update for Next 3 Hrs: அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம்.!

திண்டுக்கல், நீலகிரி, குமரி உட்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணிவரையில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

Rain Tamilnadu (Photo Credit: @WeatherRadar_IN X)

ஆகஸ்ட் 30, சென்னை (Chennai News): தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு (Chennai Regional Meteorological Center) மையம், தனது நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரையில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. TN CM US Visit: ரூ.450 கோடி செலவில், நோக்கியா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்.. மொத்தமாக 5100 பேருக்கு வேலைவாய்ப்பு.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement