Power Cut: அச்சச்சோ.. சென்னையில் உள்ள இந்த பகுதிகளில் இன்று மின்தடை; மக்களே ரெடியா இருங்கள்.!

அடையாறில் சீனிவாச மூர்த்தி அவென்யூ, கே.பி நகர், எல்.பி ரோடு உட்பட பல இடங்களில் இன்று மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Power Line (Photo Credit: PIxabay)

ஜூலை 21, சென்னை (Chennai News): தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தமிழ்நாட்டின் மின் தேவையானது பூர்த்தி செய்யப்படுகிறது. அவ்வப்போது, மின்சார விநியோக அலுவலகங்களில் மின் உபகரணங்களில் பராமரிப்பு பணியின் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்.

இந்த தற்காலிக மின் தடை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை இருக்கும். பராமரிப்பு பணிகள் முடிய நேரமாகும் பட்சத்தில், மாலை 4 மணிக்கு மின்சேவை வழங்கப்படும். இந்நிலையில், ஜூலை 21ம் தேதியான இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகளின் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. Velachery: தனியாக இருந்த பெண்களிடம் சில்மிஷம்; மக்கள் சுற்றிவளைத்ததால் கால்வாயில் குதித்து திக்குமுக்காடிய இளைஞர்.!

அதன்படி, அடையாறில் சீனிவாச மூர்த்தி அவென்யூ, கே.பி நகர், எல்.பி ரோடு, சர்தார் படேல் சாலை, சாஸ்திரி நகர், சிஷ்யா பள்ளி, அம்பிகா தெரு, நடராஜன் தெரு, திருமலா கார்டன், சோனி நகர், சீதாப்தி, லட்சுமி நகர் 6 தெருக்கள், எம்.ஜி.ஆர் நகர், நாகப்பா டி.கேம்ப், ஆர்.சி.பி.டி கேம்ப், ஆர். நகர் ஆகிய பகுதிகளும்,

கிண்டியில் ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் முதல் 3 தெருக்கள், தொழிலாளர் தெரு, கருணீகர் தெரு, யாதவா தெரு, பார்த்தசாரதி நகர், ராஜ்பவன் பகுதிகளும்,

தாம்பரம், கே.கே. நகர், ஆவடி, அம்பத்தூர், கிண்டி, போரூர், ஐ.டி கேரிடார், வியாசர்பாடி, பொன்னேரி பகுதிகளிலும் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement