வானிலை: அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, கடலூர் உட்பட 12 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
செங்கல்பட்டு, விழுப்புரம், நாகப்பட்டினம், சென்னை உட்பட 12 மாவட்டங்களில் (TN Rain Alert Today) காலை 10 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை (Chennai Weather Update) ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இத்துடன் இன்றைய வானிலை (Today Weather) மற்றும் நாளைய வானிலை (Tomorrow Weather) நிலவரம் தொடர்பாகவும் இந்த செய்தி-யில் தெரிந்துகொள்ளுங்கள்.
அக்டோபர் 14, நுங்கம்பாக்கம் (Chennai News): தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 14ம் தேதியான இன்று, இன்றைய வானிலை (Today Weather)ஐ பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Gold Silver Rate: இன்னும் 3,000 தான்.. வரலாறு காணாத புதிய உச்சத்தை நோக்கி வெள்ளி விலை.. தங்கம் விலையும் உயர்வு.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
நாளை (15-10-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது வானிலை செய்திக்குறிப்பில் தெரிவித்து இருந்தது.
காலை 10 மணிவரையில் மழைக்கு வாய்ப்பு:
இந்நிலையில், இன்று காலை 10 மணிவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.