Actress Soundarya Death Case: நடிகை சௌந்தர்யா இறந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் திருப்பம்.. வில்லன் நடிகர் மீது பரபரப்பு புகார்..!

நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் இறந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு, வில்லன் நடிகர் மோகன் பாபு மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது.

Actress Soundarya | Actor Mohan Babu File Pic (Photo Credit: @theazadarmy X)

மார்ச் 12, கம்மம் (Cinema News): தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த கன்னட நடிகை சௌந்தர்யா (Actress Soundarya), 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று, தனது 31 வயதில் ஒரு தனியார் விமான விபத்தில் காலமானார். அந்த விபத்தில் அவரது சகோதரரும் உயிரிழந்தார். ஒரு அரசியல் பிரச்சாரத்திற்காகச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. இந்நிலையில், நடிகை சௌந்தர்யாவின் மரணத்தில் வில்லன் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பு இருப்பதாக ஆந்திரப் பிரதேசத்தின் கம்மம் மாவட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. D Imman X Hacked: இசையமைப்பாளர் இமானின் வலைப்பக்கம் ஹேக்கிங்; மர்ம ஆசாமிகள் அதிர்ச்சி செயல்.!

வில்லன் நடிகர் மீது புகார்:

அவர் இறந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு, சிட்டிமல்லு என்ற நபர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சௌந்தர்யாவின் மரணம் ஒரு விபத்து அல்ல, கொலை என்றும், மோகன் பாபுவுடனான சொத்து தகராறில் இருந்து வந்ததாகவும், சௌந்தர்யாவும் அவரது சகோதரர் அமர்நாத்தும் ஷம்ஷாபாத்தின் ஜல்பள்ளி கிராமத்தில் உள்ள 6 ஏக்கர் நிலத்தை மோகன் பாபுவுக்கு (Actor Mohan Babu) விற்க மறுத்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

நிலத் தகராறு:

விமான விபத்துக்குப் பிறகு, நிலத்தை (Land Dispute) விற்க சகோதரர்கள் மீது மோகன் பாபு அழுத்தம் கொடுத்ததாகவும், அதை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாகவும் கூறியுள்ளார். ஜல்பள்ளியில் உள்ள 6 ஏக்கர் விருந்தினர் மாளிகையை பறிமுதல் செய்யக் கோரியும், அவரது குடும்பத்திற்குள் நடந்து வரும் மோதல்களையும் புகாரில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும், மோகன் பாபுவால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக, தங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement