Ordnance Factory Blast: திடீரென வெடித்த ஆயுதத் தொழிற்சாலை.. 8 பேர் துடிதுடிக்க பலி.!

மகாராஷ்டிராவின் பாந்த்ரா அருகே இந்திய ராணுவத்திற்கு வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஜனவரி 24, பாந்த்ரா (Maharashtra News): மகாராஷ்டிராவின் பாந்த்ரா அருகே இந்திய ராணுவத்திற்கு வெடிமருந்து தயாரிக்கும் ஆயுதத் தொழிற்சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த, வெடி விபத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்ற குழுவினர் மீட்புப் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடி விபத்தின் போது அந்த கட்டிடத்தின் ஒரு கூரை இடிந்து விழுந்ததாகவும், அப்போது அதன் கீழ் குறைந்தது 12 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், இடிபாடுகளை அகற்றுவதற்காக அகழ்வாராய்ச்சி இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Woman Sexual Assault: நண்பரின் மனைவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை; பெண்ணை சீரழித்த குற்றவாளிகளுக்கு வலை..!

ஆயுத தொழிற்சாலையில் விபத்து:

இந்த சம்பவம் காலை 10:30 மணியளவில் நடந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான புகை எழும்பியதை தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பயங்கர வெடி விபத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement