Eyebrow Tips: பூனை முடி போல் இருக்கும் புருவங்களை.. அடர்த்தியாக்க இத பண்ணுங்க..!

இயற்கையாகவே உங்களுடைய புருவத்தை அடர்த்தியாக மாற்றும் ஐடியாவை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம்.

Eyebrow (Photo Credit: Pixabay)

ஜனவரி 14, சென்னை (Chennai): பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது புருவம் தான். கண்கள் அழகாக இருந்தும் புருவம் அடர்த்தியாக இல்லையெனில் முகத்தின் அழகு சற்று குறைவாக தெரியும். செயற்கையாக ஐ ப்ஃரோ பென்சில் போட்டால் அழகாக தெரிவார்கள் சிலர் இதற்காக ட்ரீட்மெண்டெல்லாம் செய்வார்கள். வீட்டிலேயே சில எளிய முறைகள் மூலம் புருவங்களை இயற்கையாக (Eyebrow Growth Tips) வளர்க்க முடியும். Health Tips: எந்நேரமும் உட்கார்ந்தபடியே வேலையா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!

புருவம் அடர்த்தியாக வளர:

  • தினமும் இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணையை புருவத்தில் தடவி 2 - 3 நிமிடத்திற்கு மசாஜ் செய்து வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும்.
  • ஐ ப்ஃரோ பென்சிலை விளக்கெண்ணையில் தொட்டு புருவத்தில் வரைந்து வந்தால் அதே வடிவத்திற்கு புருவம் வளரும்.
  • தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது சூடு செய்து இளஞ்சூட்டிலேயே புருவத்தில் மசாஜ் செய்து வரலாம்.
  • 2 சின்ன வெங்காயத்தை தட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். அந்த சாற்றில் ஒரு பஞ்சை நனைத்து புருவத்தில் தடவி வர விரைவிலேயே முடிவளர்வதைக் காணலாம்.
  • கற்றாழை சதைப் பகுதியை புருவத்தில் காலை மாலை என தடவி வந்தால் புருவ முடிக்கு பலமளித்து அடர்த்தியாக வளரும்.
  • புருவத்திற்காகவே கடைகளில் கிடைக்கும் சீரம் வாங்கிப் பயன்படுத்தலாம். வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொண்டாலே போதும் புருவ முடி வளர ஆரம்பிக்கும். இவை அனைத்தையும் தொடர்ச்சியாக செய்தால் தான் நல்ல பலன் கிடைக்கும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement