Eyebrow Tips: பூனை முடி போல் இருக்கும் புருவங்களை.. அடர்த்தியாக்க இத பண்ணுங்க..!
இயற்கையாகவே உங்களுடைய புருவத்தை அடர்த்தியாக மாற்றும் ஐடியாவை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம்.
ஜனவரி 14, சென்னை (Chennai): பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது புருவம் தான். கண்கள் அழகாக இருந்தும் புருவம் அடர்த்தியாக இல்லையெனில் முகத்தின் அழகு சற்று குறைவாக தெரியும். செயற்கையாக ஐ ப்ஃரோ பென்சில் போட்டால் அழகாக தெரிவார்கள் சிலர் இதற்காக ட்ரீட்மெண்டெல்லாம் செய்வார்கள். வீட்டிலேயே சில எளிய முறைகள் மூலம் புருவங்களை இயற்கையாக (Eyebrow Growth Tips) வளர்க்க முடியும். Health Tips: எந்நேரமும் உட்கார்ந்தபடியே வேலையா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
புருவம் அடர்த்தியாக வளர:
- தினமும் இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணையை புருவத்தில் தடவி 2 - 3 நிமிடத்திற்கு மசாஜ் செய்து வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும்.
- ஐ ப்ஃரோ பென்சிலை விளக்கெண்ணையில் தொட்டு புருவத்தில் வரைந்து வந்தால் அதே வடிவத்திற்கு புருவம் வளரும்.
- தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது சூடு செய்து இளஞ்சூட்டிலேயே புருவத்தில் மசாஜ் செய்து வரலாம்.
- 2 சின்ன வெங்காயத்தை தட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். அந்த சாற்றில் ஒரு பஞ்சை நனைத்து புருவத்தில் தடவி வர விரைவிலேயே முடிவளர்வதைக் காணலாம்.
- கற்றாழை சதைப் பகுதியை புருவத்தில் காலை மாலை என தடவி வந்தால் புருவ முடிக்கு பலமளித்து அடர்த்தியாக வளரும்.
- புருவத்திற்காகவே கடைகளில் கிடைக்கும் சீரம் வாங்கிப் பயன்படுத்தலாம். வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொண்டாலே போதும் புருவ முடி வளர ஆரம்பிக்கும். இவை அனைத்தையும் தொடர்ச்சியாக செய்தால் தான் நல்ல பலன் கிடைக்கும்.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Chettinad Kaalan Thokku: செட்டிநாடு ஸ்டைலில் ருசியான காளான் தொக்கு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
Advertisement
Advertisement
Advertisement