Benefits Of Peanuts: நிலக்கடலையில் உள்ள பயன்கள் என்னென்ன..! விவரம் உள்ளே..!

உடலுக்கு ஆரோக்கியம் அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நிலக்கடலையில் உள்ள பயன்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

Peanuts (Photo Credit: Pixabay)

ஜூன் 01, சென்னை (Health Tips): நிலக்கடலையில் (Peanuts) இயற்கையாகவே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவற்றை தினமும் உட்கொள்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தினசரி நிலக்கடலையை சீரான அளவில் உட்கொள்வதல் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நீரழிவு நோயை தடுக்கும்: இதில், மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. இது சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. குறிப்பாக, பெண்கள் நிலக்கடலையை (Groundnut) தொடர்ந்து சாப்பிட்டுவர, எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

பித்தப்பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால், பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்கும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டது. Father Hanging Suicide: பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை; ஜாமீனில் வெளிவந்த தந்தை தூக்குப்போட்டு தற்கொலை..!

இனப்பெருக்கம்: போலிக் ஆசிட் (Folic Acid) அதிகம் இருப்பதால், இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. இதனைத்தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன், கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இதய நலம் காக்கும்: நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாத்து, இதய நோய்கள் வருவதை தடுக்கின்றது.

இளமையை பராமரிக்கும்: இதில், பாலிபீனால்ஸ் (Polyphenols) என்ற ஆண்டி-ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன், இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகின்றது.

ஞாபக சக்தியை அதிகரிக்கும்: மூளை வளர்ச்சிக்கு பயன்படும் வைட்டமின் 3 நியாசின் நிலக்கடலையில் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் மற்றும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கின்றது. மேலும், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தத்தை போக்கும்: நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்து உள்ளது. இது, செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகின்றது. மேலும் மூளை நரம்புகளை தூண்டி, மனஅழுத்தத்தை போக்குகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement