Youth Suicide Attempt: ரேஷன் கார்டு வழங்காததால் ஆத்திரம்; வாலிபர் தற்கொலை முயற்சி.. பரபரப்பு சம்பவம்..!
தெலுங்கானாவில் ரேஷன் கார்டு வழங்காததால் தாசில்தார் அலுவலகத்தில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 14, காமரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலம், காமரெட்டி (Kamareddy) மாவட்டம், நிஜாம்சாகர் மண்டலத்தில் உள்ள மல்லுரு கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் கவுட். இவர், ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை எனக் கூறி, தாசில்தார் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். தனது ரேஷன் கார்டு குறித்து எத்தனை முறை கேட்டாலும் அதிகாரிகள் முரண்பாடான பதில்களை அளிப்பதால், ஆத்திரமடைந்த அவர், தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Teenager Beaten To Death: டீக்கடையில் வாக்குவாதம்; இரு கும்பல் மோதலில் வாலிபர் படுகொலை..!
வீடியோ இதோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)