College Student Dies: செல்போனில் மூழ்கியதால் முட்டிதூக்கிய ரயில்.. தண்டவாளத்தில் சென்ற கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்.!
கவனக்குறைவாக செல்போன் பேசியபடியே தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மே 12, சென்னை (Chennai News): சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தை இறுதியாண்டு படித்து வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் கடக்க முயன்றுள்ளனர். இவர்கள் செல்போன் பேசியபடி அலட்சியமாக தண்டவாளத்தை கடந்ததாக கூறப்படுகிறது.
ரயில் மோதியதில் உயிரிழப்பு :
இந்நிலையில் எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், விசாரணை நடத்தினர். Chennai Shocker: 13 வயது சிறுமியை சீரழித்த 12 பேர் கும்பல்.. நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.!
காவல்துறையினர் விசாரணை :
காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்தவர்கள் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியைச் சேர்ந்த சபீர் அகமது (வயது 20) மற்றும் முகமது நபி (வயது 20) என தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் செல்போன் பேசியபடி சென்றதே உயிர் இழப்புக்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)