வானிலை: மக்களே ரெடியா! தொடரும் வடகிழக்கு பருவமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தமிழ்நாட்டில் ஜனவரி 11ஆம் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Rains (Photo Credit: @akarthikcs X)

ஜனவரி 06, நுங்கம்பாக்கம் (Chennai News): கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜனவரி 6) கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. Pongal Holidays 2025: பொங்கல் பண்டிகை 2025; 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு..!

மீண்டும் மழை எச்சரிக்கை:

அதே நேரத்தில் வருகிற 11ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement