RIP Actor Sarathbabu (Photo Credit: Twitter)
மே 22, ஹைத்ராபாத் (Cinema News): தென்னிந்திய திரை உலகில் மிகப்பெரிய உச்ச நடிகர் ஆகவும், தற்போது துணை நடிகராகவும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகர் சரத் பாபு. இவர் ஆந்திர பிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சரத் பாபு, தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இதனிடைய அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதியாகி இருந்த நிலையில், முன்னதாகவே அவர் இறந்துவிட்டதாக பல செய்திகள் வெளியாகி பின்னர் அவை போலியானவை என்று அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது அவரது மறைவு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இவருக்கு தற்போது 71 வயது ஆகிறது. தனது திரையுலக வாழ்க்கையில் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on May 22, 2023 06:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).