Love Married Cine Stars: தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதல் திருமணம் செய்த நட்சத்திர ஜோடி யார் தெரியுமா?..!
தமிழ் திரையுலகில் முதன் முதலாக காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி யார் என உங்களுக்கு தெரியுமா?. அந்த நட்சத்திர ஜோடி குறித்து இன்று காணலாம்.
டிசம்பர், 10: தமிழ் திரையுலகம் (Kollywood Cinema) இன்று உலகளவில் கவனிக்கப்படும் திரைஉலகமாக மாறிவிட்டது. கடந்த 1931ம் ஆண்டுக்கு பின் வெளியாகிய ஒவ்வொரு படமும் அன்று முதல் இன்று வரை பல சாதனைகள் படைத்து வருகின்றன. படத்தில் நடிக்கும் நாயகர்கள் - நாயகிகள் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகளை பெறுகின்றனர்.
இவ்வாறாக நடிப்பில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடிக்கும் ஜோடிகள், சில நேரங்களில் காதல் வயப்பட்டு விடுகின்றன. இதில், அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, பிரசன்னா - ஸ்னேகா என பல நட்சத்திர ஜோடிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், தமிழ் திரையுலகில் முதன் முதலாக காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி யார் என உங்களுக்கு தெரியுமா?. அந்த நட்சத்திர ஜோடி குறித்து இன்று காணலாம். Nose Bleeding: மூக்கில் இருந்து இரத்தம் வழிந்தால் என்ன செய்ய வேண்டும்?.. பதற்றத்திலும் நிதானம் வேண்டும்.!

தமிழ் திரையுலகில் திரைப்பட நடிகராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் என பன்முகம் கொண்ட நபராக இருந்தவர் பி.யூ. சின்னப்பா (P. U. Chinnappa). இவரின் மனைவி நடிகை சகுந்தலா (A.Sakunthala). சகுந்தலா பி.யூ சின்னப்பாவுடன் பிரித்விராஜன் திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் பேசி பழகி காதல் வயப்பட்ட நிலையில், திருமணமும் செய்துகொண்டு அன்போடு வாழ்ந்து வந்தனர். ஆனால், பி.யூ சின்னப்பா தனது 30 வயதிலேயே இயற்கை எய்தினார். அவர் 1936 - 1951 வரை சொற்ப அலைவிலான படங்களே நடித்திருந்தாலும் சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு அன்றே தகுதியானவராகி இருந்தார்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 09:48 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(The above story first appeared on LatestLY on Dec 20, 2022 03:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

