பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை.. ஆட்டோ ஓட்டுநர் கைது..!

மும்பையில் பாலியல் தொழிலாளி பெண்ணை, பாலியல் வன்கொடுமை (Woman Rape Case) செய்து கொலை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Abuse (Photo Credit: Pixabay)

அக்டோபர் 01, மதுரா (Uttar Pradesh News): மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் (Mumbai) கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சர்ச் சாலையில் உள்ள சாவந்த் வளாகத்தில் பெண் ஒருவர், மயக்கமடைந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது, இதனால் காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். LPG Cylinder Price: மாதத்தின் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த சிலிண்டர் விலை.. விலை உயர்வு.!

ஆட்டோ ஓட்டுநர் கைது:

இதனையடுத்து, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆட்டோ ஓட்டுநர், பாதிக்கப்பட்ட பெண்ணின் துப்பட்டாவை பயன்படுத்தி அவரை கொன்றுள்ளார். அவர் ஆக்ராவைச் சேர்ந்த சந்திரபால் ராம்கிலாடி (வயது 34) என்று அடையாளம் காணப்பட்டார். தற்போது, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் பதுங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணையில், அவர் பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்து கொலை செய்த குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மும்பைக்கு போக்குவரத்து காவலில் கொண்டு வரப்பட்டார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement