Woman Kills Snake: கடித்துச் சென்ற விஷப்பாம்பை.. அடித்துக்கொன்ற சிங்கப்பெண்.. வைரலாகும் வீடியோ..!
தெலுங்கானா மாநிலத்தில் முலுகு மாவட்டம் முக்குனுருபாலம் கிராமத்தில் பாம்பு கடித்ததால் கடுப்பான பெண்மணி ஒருவர், அந்தப் பாம்பினை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 15, முலுகு (Telangana News): தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் முக்குனுருபாலம் கிராமத்தை (Mukunurupalem Village) சேர்ந்தவர் சாந்தமா. இவர் கிராமத்தில் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென இவரை பாம்பு கடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து செய்வதறியாமல் சாந்தமா உடனடியாக, அந்தப் பாம்பினை கொன்றார். அதுமட்டுமின்றி அவர் கொன்ற பாம்பினை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். Protect Your Computer & Mobile During Summer: WFH முறையில் கணினியில் வேலையா? ஸ்மார்ட் பொருட்களை கொளுத்தும் வெயிலில் இருந்து பாதுகாப்பது எப்படி?.!
அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், அந்தப் பாம்பு விஷத்தன்மையுடையது என்பதனை கண்டறிந்தனர். தொடர்ந்து சாந்தம்மாவிற்கு சிகிச்சை அளித்தனர். தற்போது சாந்தமாவின் வீடியோ தான் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
పాము కరిచిందని దాన్ని చంపి ఆస్పత్రికి తీసుకెళ్లిన మహిళ
ములుగు - వెంకటాపురం మండలం ముకునూరుపాలెం గ్రామానికి చెందిన శాంతమ్మ ఉపాధి హామీ పనులు చేస్తుండగా పాము కరిచింది.. పాము గురించి తెలియకుండా డాక్టర్లు ఇంజక్షన్ ఇవ్వరని శాంతమ్మ పామును చంపి ఆస్పత్రికి తీసుకెళ్లింది.
పామును… pic.twitter.com/7vKruOsG4Z
— Telugu Scribe (@TeluguScribe) April 15, 2024
(The above story first appeared on LatestLY on Apr 15, 2024 03:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

