Assam CM Himanta Biswa Sarma: காங்கிரசின் தவறான கொள்கையால் இரத்தத்தால் நிரம்பும் வடகிழக்கு மாநிலங்கள்?; அசாம் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு.!

வடகிழக்கு மாநிலத்தில் சுதந்திரம் பெற்றபின்பும் பிராந்திய பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க இயலவில்லை. அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியே என அசாம் முதல்வர் தெரிவித்தார்.

Assam CM & BJP State President Himanta Biswa Sarma (Photo Credit: @ANI Twitter)

ஆகஸ்ட் 08, அசாம் (Assam News): அசாம் மாநில பாஜக தளிர் & அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா (Himanta Biswa Sarma) இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் காங்கிரஸ் கட்சி உருவாகிய ஆண்டுகளில், அவர்கள் பின்பற்றிய தவறான கொள்கையின் காரணமாக, இன்று வடகிழக்கு மாநிலத்தில் சுதந்திரம் பெற்றபின்பும் பிராந்திய பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க இயலவில்லை. இதனை நான் தெளிவாகவே கூற விரும்புகிறேன். வடகிழக்கு இந்திய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை அடையாளம் என்பது பிரித்து ஆட்சி செய்வது ஆகும். நாகலாந்து, அசாம், மிசோரம், மணிப்பூர் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் கைகள் இரத்தத்தால் நிரம்பி இருக்கின்றன" என தெரிவித்தார். Girl Narrow Escape: இரயில் பயணத்தில் சீன் போடும் சில்வண்டுகள் கவனத்திற்கு… மரணத்தின் வாசல்படி சென்று திரும்பிய சிறுமி.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.! 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement