மே 09, டெல்லி (Delhi News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சிஏ தேர்வுகள் (CA Exam) ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நிலவும் பதட்டமான பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சிஏ இறுதி, இடைநிலை மற்றும் PQC தேர்வுகளின் மீதமுள்ள மதிப்பீட்டுத் தேர்வுகள், மே 09, 2025 முதல் மே 14, 2025 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Air Siren in Chandigarh: சண்டிகரில் சைரன் ஒலி.. மக்கள் கவனத்துடன் இருக்க இந்திய ராணுவம் எச்சரிக்கை.!

சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)