Special Train Caught Fire: பயணிகள் இரயிலில் திடீர் தீ விபத்து; சாதுர்யமாக உயிர் தப்பிய பயணிகள்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!

ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர் வந்தவர்களை அழைத்துக்கொண்டு மும்பை நோக்கி புறப்பட்ட பயணிகள் இரயில் திடீர் தீ விபத்தில் சிக்கியது.

Special Train Caught Fire: பயணிகள் இரயிலில் திடீர் தீ விபத்து; சாதுர்யமாக உயிர் தப்பிய பயணிகள்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!
Train Fire in Bhojpur, Bihar (Photo Credit: @ANI X)

மார்ச் 27, போஜ்புர் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள போஜ்புரில், நேற்று இரவு ஆராஹ் சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து மும்பை எல்எல்டி நோக்கி இயக்கப்பட்ட சிறப்பு இரயில் திடீரென தீ விபத்தை சந்தித்தது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் வந்தவர்கள் (Bhojpur Train Fire Accident), மீண்டும் பணியிடத்திற்கு திரும்ப ஏதுவாக இயக்கப்பட்ட இரயில், ஆராஹ் இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிலமணித்துளிகளில், கரிசத் இரயில் நிலையம் அருகே இவ்விபத்தில் சிக்கியது. இதனையடுத்து, இரயில் பயணிகள் அனைவரும் அபாயசங்கிலியை பிடித்து இழுத்து அவசர கதியில் ரயிலில் இருந்து இறங்கி உயிர்தப்பினார். நல்வாய்ப்பாக எவ்வித காயமும் யாருக்கும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். பயணிகள் அனைவரும் மாற்று இரயிலில் மீண்டும் தங்களின் பயணத்தை தொடங்கினர். இதனால் அவ்வழித்தடத்தில் நேற்று இரவு 5 இரயில் சேவை பாதிக்கப்பட்டது. அந்த இரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. Money Recovered from Washing Machine: ரெய்டில் அதிரடி காட்டிய அமலாக்கத்துறை; வாஷிங் மெஷினில் கட்டுக்கட்டாக பணம்.. ரூ.2.54 கோடி பறிமுதல்.! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 27, 2024 10:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).