Trending Video: மதுபோதையில் பாம்பை நூடுல்ஸ் போல கடித்து தின்ற இளைஞர்.. பதறவைக்கும் சம்பவம்.!
உத்திரபிரதேசத்தில் மதுபோதையில் பாம்பை ஒருவர் கடித்து தின்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜூலை 19, உத்திர பிரதேசம் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலம் பண்டா பகுதியில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது அவரின் வீட்டருகே பாம்பு ஒன்று சுற்றித்திரிந்த நிலையில், அந்த பாம்பை பிடித்தவர் தனது வாயால் கடித்து தின்று இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அசோக் என்ற அந்த நபரை மீட்டு அங்குள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதை என்பது உயிருக்கு எப்படியெல்லாம் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது. உடலில் தற்கொலை குறிப்பு எழுதி பெண் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
பாம்பை தின்றபின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடியோ :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)