TN Weather Update: காலை 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
கடலூர், கரூர், புதுக்கோட்டை உட்பட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில் மழைக்கு சாதகமான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 14, சென்னை (Chennai News): தமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதியான இன்று, வரும் 3 மணிநேரத்திற்கு, அதாவது காலை 10 மணிவரையில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. TN Weather Update: 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 14, 2024 07:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

