
மே 27, லக்னோ (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரில், இன்று (மே 27) 70வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. இது ஐபிஎல் 2025 தொடரின் கடைசி லீக் போட்டி ஆகும். பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 3வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் முதலிரண்டு இடங்களுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. LSG Vs RCB: ரிஷப் பந்த், மிட்செல் மார்ஷ் அபாரம்.. ஆர்சிபி வெற்றிக்கு இமாலய இலக்கு..!
சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் (Lucknow Super Giants Vs Royal Challengers Bengaluru):
அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணிக்கு மாத்யூ 14 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ரிஷப் பந்த், மிட்செல் மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்து, ஆர்சிபி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்க விட்டனர். 2வது விக்கெட்டுக்கு 78 பந்துகளில் 152 ரன்கள் சேர்த்த நிலையில், மிட்செல் மார்ஷ் 67 ரன்களுக்கு அவுட்டானார். மறுபுறம், ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதமடித்து (61 பந்துகள், 118* ரன்கள்) அசத்தினார். இறுதியில், லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 227 ரன்கள் அடித்தது.
ஆர்சிபி அபார வெற்றி:
ஆர்சிபி அணி 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தியது. பில் சால்ட் - விராட் கோலி ஜோடி அதிரடியான தொடக்கம் கொடுத்தது. சால்ட் 30 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ரஜத் பட்டிதர் 14, லியாம் லிவிங்ஸ்டன் 0 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். மறுபுறம், அதிரடியாக விளையாடிய விராட் கோலி அரைசதம் (54 ரன்) கடந்து அவுட்டானார். அடுத்து, மயங் அகர்வால் - கேப்டன் ஜித்தேஷ் சர்மா ஜோடி அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஜித்தேஷ் சர்மா (Jitesh Sharma) 33 பந்துகளில் 85 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆர்சிபி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 230 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.