Accident File Pic (Photo Credit: PTI)

ஜூலை 19, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சை மாவட்டம் விக்ரமம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா. இவருக்கு வயது 35. இவர் தன்னுடைய 10 வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழகுறிச்சி வழியே சென்று கொண்டுள்ளார். அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த பேருந்தினை முந்தி செல்ல முயன்ற போது எதிர் திசையில் வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். TN Weather Update: புயல் எச்சரிக்கை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

இதில் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த விக்னேஷ் என்பவரும், ராதிகா மற்றும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.